அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நாளை சுகாதார துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும்-வைத்தியர் ரி.வினோதன்.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் சனிக்கிழமை(29) சுகாதார துறையினருக்கு முதல் முதலாக செலுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக 1280 கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை எமது சுகாதார துறையினருக்கு முதுல் கட்டமாக செலுத்தப்படவுள்ளது. 2 ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

 இதே வேளை மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 170 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 1153 பேர் இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் நாளை சுகாதார துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும்-வைத்தியர் ரி.வினோதன். Reviewed by Author on January 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.