மன்னாரில் தேங்காய் எண்ணெய் கலப்படம் தொடர்பாக பாவனையாளர் அதிகார சபையினரால் மாதிரிகள் சேகரிப்பு
மாவட்ட ரீதியாக உள்ள மொத்த மற்றும் பிரதான விற்பனை நிலையங்களில் மேற்படி மதிரிகள் சேகரிக்கப்பட்டு இன்றைய தினம் தேசிய பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளது.
மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் ஒழுங்கமைப்பில் கலப்படம் மற்றும் அங்கிகரிக்கப்படாத எண்ணைகள் தொடர்பாக ஆரயப்பட்டதுடன் சந்தேகத்துக்குறிய எண்ணைகளின் மாதிரிகளும் பெறப்பட்டுள்ளது.
மேற்படி பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தேசிய பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அத்துடன் தேசிய பகுப்பாய்வு திணைக்களத்தினூடாக மாதிரிகளில் கலப்படம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் விற்பனையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் தேங்காய் எண்ணெய் கலப்படம் தொடர்பாக பாவனையாளர் அதிகார சபையினரால் மாதிரிகள் சேகரிப்பு
Reviewed by Author
on
March 29, 2021
Rating:

No comments:
Post a Comment