1,263 கிலோ உலர்ந்த மஞ்சள் பறிமுதல்
இதன் போது சந்தேக நபர்களினால் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும் குடியிருப்பு பகுதி கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையாக வீரர்களின் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற மற்றுமொரு நடவடிக்கையின் போது 15 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 543.7 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, பேசாலை கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையாக வீரர்களின் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற மற்றுமொரு நடவடிக்கையின் போது 258.5 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேசாலை மற்றும் நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 22 தொடக்கம் 44 வயதுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குடியிருப்பு மற்றும் பேசாலை பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் படகுகளின் பல மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் யாவும் கொவிட் 19 பாதுகப்புக்கான சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
1,263 கிலோ உலர்ந்த மஞ்சள் பறிமுதல்
Reviewed by Author
on
April 24, 2021
Rating:
Reviewed by Author
on
April 24, 2021
Rating:


No comments:
Post a Comment