அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு- வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குருதி வழங்க முன் வருபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் அல்லது 023-2222261,மற்றும் 023-2222349 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி குருதி வழங்கி வைக்க முடியும் என மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா மேலும் தெரிவித்தார்.


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு- வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கை Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.