அண்மைய செய்திகள்

recent
-

நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கொள்ளுப்பிட்டியில் கைது

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் Tab விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையமொன்றை நடத்தும் போர்வையில் சந்தேகநபர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

 11 மில்லியனுக்கும் அதிக பணம் சந்தேகநபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களுக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 70 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு – முகத்துவாரம் மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கொள்ளுப்பிட்டியில் கைது Reviewed by Author on May 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.