அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 401,078 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடள் ஒரே நாளில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 401,078 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 21,892,676 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

 இதுவரை கொரோனாவிலிருந்து 17,930,960 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 318,609 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 37,23,446 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 4,187 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 238,270 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 167,346,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் பலி Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.