அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர். இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளார்.

 இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீரினுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை கடற்படையின் சுழி ஓடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நபரின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.