மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'டெலோ' உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பணிப்பிற்கு அமைய தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது சவிரி குளம் , வங்காலை , தலைமன்னார் பியர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்டமாக 107 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 1500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த் வழங்கி வைத்தார்.
தெரிவு செய்யப்பட்ட மக்ளின் இடங்களுக்கு நேரடியாக சென்று குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'டெலோ' உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தது.
Reviewed by Author
on
June 08, 2021
Rating:

No comments:
Post a Comment