மன்னாரில் பாதுகாப்பற்ற மீன் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
குறித்த நபர் மற்றும் அவருடைய உறவினர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியது மாத்திரம் இன்றி புகைப்பட கருவியில் எடுக்கப்பட்ட ஆதாரங்களையும் அழிக்க வற்புறுத்திய நிலையில் குறித்த பண்ணையால் பாதிக்கப்பட்டு ஆதங்கம் வெளிப்படுத்திய இளைஞர் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து மக்களின் எதிர்பை தொடர்ந்து அவ் இடத்தை விட்டு சென்றதை தொடர்ந்து தாக்கப்பட்ட இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் மற்றும் ஊடகவியலாளரின் பணிக்கு இடையூரை ஏற்படுத்தியமை தொடர்பாகவும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.
குறித்த இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் எந்த வித பாதுகாப்பும் இன்றி ஆழமான குழிகள் தோண்டப்பட்டு, பண்ணைகள் அமைக்கப்பட்டு தற்போது பராமரிப்பு இல்லாத நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கையிட சென்ற நிலையிலேயே அவ்வாறு அமைக்கப்பட்ட பண்ணை ஒன்றின் உரிமையாளரும் இலுப்பைகடவை மீனவ சங்க தலைவருமான குறித்த நபர் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் பாதுகாப்பற்ற மீன் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
Reviewed by Author
on
June 19, 2021
Rating:
Reviewed by Author
on
June 19, 2021
Rating:




No comments:
Post a Comment