அண்மைய செய்திகள்

recent
-

பெண் பாலியல் இலஞ்ச சர்ச்சை திட்டமிட்டு பழிவாங்கப்பட்டாரா பிரதேச செயலாளர் !!

அண்மையில் மட்டக்களப்பு பகுதியினை சேர்ந்த தமிழ் பிரதேச செயலாளர் மீது வாழைச்சேனையை சேர்ந்த பெண் "பாலியல் இலஞ்சம்"கேட்டதாக புகார் அளித்திருந்தாள்"அந்த செய்தியில் எந்தளவு உண்மையுள்ளது என்பதற்கு அப்பால் அதற்கான பின்னணீயை ஆராய்வது தமிழ் சமூகத்தின் இன்றியமையாததாகும். குறிந்த பிரதேச செயலாளர் அரசியல்வாதிகளுக்கு அடிபணியாத துணிவுடன் செயற்பட்டதுடன் இன,மதவாதிகளின் செயற்பாட்டை நேர்மையுடன் தட்டிக் கேட்ட துணிச்சல் மிக்க,அரசியல் சோரம் போகத அதிகாரியாவார்.அதனால் சில அரசியல் வாதிகளுக்கு அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு குறிக்கொளாக கொண்டு செயற்பட்டனர்.அதன்காரணமாக மண் பேமிட் உட்பட பல விடயங்களில் குறித்த அரசியல்வாதியினால் நேரடியாக மிரட்டப்பட்டமையும் குறிப்பிட தக்கது. பிரதேச"செயலாளர் மீது பழி சுமத்திய குறித்த பெண்ணை ஆறியும் போது அவள் சாதாரண,ஒழுக்க கட்டுப்பாட்டுடான குடும்ப சூழலுக்குரிய பெண்ணாக தெரியவில்லை.அவள் ஓரு அரசியல் கட்சியின் முக்கிய பெண் நிர்வாகியாவாள்.


அவள் கடந்த காலங்களின் தெகிவளை−கல்கிசை மற்றும் வாழைச்சேனை சுற்றுலா விடுதியில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையிலுள்ளது. இவர் குறித்த பிரதேச செயலாளரை அவமானப்படுத்தி பழி தீர்க்கவே நடந்ததாக அவரது வாக்குமூல சம்பவம் கிரகிப்பவையாக உள்ளது. பாலியல் இலஞ்சம் கேட்டதாக கூறிய குறித்த பெண் அதனை ஏன் கொழும்பிலுள்ள தலைமை பொலிசில் முறைபாட்டை செய்ய வேண்டும்.

பெண்ணால் எவ்வாறு கொழும்பு தலைமை பொலிசில் முறையிட முடியும்?அந்தளவு செல்வாக்கு சாதாரண பெண்ணிடம் உள்ளதா?சம்பவம் சம்பந்தமாக இணைத்தளத்தில் செய்தி வேகமாக பரப்ப சாதாரண பெண்ணால் முடியுமா?இந்த சம்பவம் நடைபெற்ற பெண் அது சம்பந்தமான மன அழுத்தத்தில் இருப்பது வழமை.ஆனால் குறித்த பெண் சம்பவம் நடந்ததிலிருந்து இதுவரை 7வகையான டிக்டொக்் விடியோவினை தனது முகநுாலில் பதிவேற்றியுள்ளார்?இது சாத்தியமானதா? அத்துடன் குறித்த பெண் செய்துள்ள முறைப்பாட்டில் பல முறண்பாடு உள்ளது.அந்த பெண் தெரிவித்துள்ள முறைபாட்டில் "குறித்த பிரதேச செயலாளர் தன்னை குறித்த பிரதேச செயலகத்தில் வைத்தே பாலியல் இலஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார். 

இது அவரது நம்பகத் தன்மையில் சந்தேகம் நிலவுகிறது.அத்துடன் பாலியல் இலஞ்சம் கோருபவர்களை நேர்மையான பெண் சம்பவம் நடைபெற முன்பே முறைப்பாடு தெரிவிப்பார்.ஆனால் சம்பவம் நடந்த"பிறகு பல தடைவைகள் தன்னுடன் பாலியல் ரீதியால உறவு வைத்ததாக கூறியுள்ளமை சந்தேகத்தை உருவாக்குகிறது.மேலும் குறித்த பிரதேச செயலாளர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.ஆனால் அவ்வாறான செய்தியில் உண்மையில்லை என்று குறித்த பிரதேச செயலகத்தில் பணி புரியும் பெண்கள் குறித்த பிரதேச செயலாளர் பற்றி குறிப்பிடுகையில் இவர் கண்ணியம் தவராதவர், ஒரு நேர்மையானவர் என கூறியுள்ளனர்.

 அந்த பெண்ணின் முகநூல் மற்றும் இணையத்தள வழிகளில் ஆராயும் போது அந்த பெண் தனக்கு எதிராக யாரேனுமொருவர் விமர்சித்தால் "ஒழுக்கத்திற்கு மாறாக"செந்தமிழில் ஏசி விடுவது வாடிக்கையாக கொண்டுள்ளார்.இப்படிபட்ட பெண் ஒழுக்கமான,நேர்மையானவளா இருக்க வாய்பில்லை.மேலும் குறித்த பெண் பல்தரப்பட்ட ஆடவரிடமிருந்து பல இலட்சக்கணக்காண பணத்தை வாங்கிஅதனை கொடுக்க மறுத்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன. குறித்த பிரதேச செயலாளர் அண்மையில்"புலம் பெயர் அமைப்பினால் கெளரவிக்கப்பட்டவராவார்.அவருக்கு எதிராக இதுவரை எந்த விதமான தவறான விமர்சனங்களும் தெரிவிக்கப்படவில்லை.

 இதிலிருந்து அவரது நேர்மை புரிகிறது.ஆனால் சில ஆயிரம் ரூபாய் பணத்திற்காக இப்படிபட்ட பெண்கள் அரசியல் காழ் புணர்ச்சியுடனான அரசியல் வாதிகளுக்கு துணை போவது வெட்கத்திற்குரியதாகும். அத்துடன் குறித்த அரசியல் வாதிகளுக்கு துணை போகும் பெண்கள் தமது எதிர்காலத்தை பற்றி யோசிப்பதில்லை அரசியல்வாதிளின் கைபொம்மையாக இருந்து தமது வாழ்க்கை சீரழிக்கின்றனர். காயப்பட்ட தமிழ் சமூகத்திற்காக நேர்மையாக செயற்படும் குறித்த பிரதேச செயலாளர் போன்றவர்களை பழி"தீர்ப்பதற்காக அரசியல் வாதிகளுக்கு துணை போகும் இப்படிபட்ட தமிழ் பெண்களின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. 

  எமது ஊடக தர்மத்தின் படி குறித்த பெண்ணின் பெயர் உட்பட ஏனைய அடையாளங்களை தெரிவிப்பது நேர்மையற்ற செயலாகும்.எனவே குறித்த பெண் சம்பந்தமானஅனைத்து அடையாளங்களையும் மறைத்துள்ளோம்.இருப்பினும் நேர்மையான சில அதிகாரிகளை காப்பது எமது இன்றை சூழலில் கட்டாயமானதாகும். குறித்த பெண் அவதூாறு கூறினாலும் அவளும் ஒரு பெண் என்ற அடிப்படையில் குறித்த பிரதேச செயலாளர் குறித்த பெண்ணுடன் உறவு வைத்திருப்பாராயின் அதுவும் வன்மையாக கண்டிக்க தக்கது.இருப்பினும் இலங்கை சட்டத்தின் பிரகாரம் "ஒரு ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் உறவு வைப்பது சட்டப்படி ஏற்புடையதாகவே அமைகிறது.

ஆனால் அது பிறரையோ கடைமையையோ பாதிக்காததாக அமைய வேண்டும்.குறித்த பெண் குறிப்பிட்டதன் பிரகாரம் விடுமுறை நாளிலேயே தன்னுடன் இருந்தமை அது சட்ட சிக்கலற்ற விடயமாகும்.மொத்தத்தில் யார் தவறு செய்தாலும் அது தவறாகும்.அண்மைக்காலத்தில் ஒரு நேர்மையான அதிகாரிகளை பழி வாங்குவதற்கு"பாலியல் இலஞ்சம்"என்ற விடயத்தினையே ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.இது சமீப காலமாக பல நேர்மையான அதிகாரிகளை பழி தீர்க்க பயன்பட்ட காத்திரமானநடவடிக்கையாகும்.தமிழ் மக்களாகிய நாம் ஒரு விடயம் வெளிவருதென்றால் அதிலிலுள்ள உண்மைகளை ஆராய்ந்து நம்புவதே ஒமுக்கமான சமூகத்தின்அறமாகும்.இனி மேலும் இப்படிபட்ட அரசியல் பழி,வாங்கல்கள் நேர்மையான அதிகாரிகள் மீது பழி சுமத்தப்படுவது நிறுத்தப் படல் வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

-குளக்கோட்டன் 





பெண் பாலியல் இலஞ்ச சர்ச்சை திட்டமிட்டு பழிவாங்கப்பட்டாரா பிரதேச செயலாளர் !! Reviewed by Author on June 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.