அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று (09) ஆரம்பமானது. இன்று காலை பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில், பல்வேறு சிக்கல்களைக் கொண்ட, 35 வயதிற்கு மேற்பட்ட 35 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீன தயாரிப்பு சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, அசேல குணவர்தன தெரிவித்தார்.

 பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் திட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று (08) 166 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் Reviewed by Author on June 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.