அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் (கசிப்பு) ஐவர் கைது

சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட கசிப்புடன் மன்னாரில் 5 நபர்கள் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகளினால் இன்று வியாழக்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வட்டுப்பித்தான் மடு,சமயபுரம்,புதுக்கமம் போன்ற கிராமங்களில் வைத்தே இவர்கள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் (கசிப்பு) கைது செய்யப்பட்டுள்ளனர். 

 மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை (17) காலை மன்னார் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த பகுதிகளில் வைத்து குறித்த 5 நபர்களும் கைது செய்யப்பட்டதோடு,அவர்களின் உடமையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் 5 பேரூம் விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
               




.
மன்னாரில் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் (கசிப்பு) ஐவர் கைது Reviewed by Author on June 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.