மன்னார்-வங்காலை கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் இந்திய மருத்துவ கழிவுப் பொருட்கள்.
குறித்த மருத்துவ கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ளமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் என்.பவநிதி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
இந்த மருத்துவ கழிவு பொருட்களுக்கும் கொழும்பில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து வெளி வரும் கழிவுப் பொருட்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
குறித்த மருத்துவ கழிவு பொருட்களை கடற்கரை தூய்மையாக்கள் பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இவை இந்தியாவின் மருத்துவ கழிவு பொருட்கள். தற்போது தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் இவ்வாறான கழிவு பொருட்கள் மன்னார் மாவட்ட கடற்கரையயோரங்களில் கரையொதுங்குகிறது.
மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. என மன்னார் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் என்.பவநிதி தெரிவித்தார்.
மன்னார்-வங்காலை கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் இந்திய மருத்துவ கழிவுப் பொருட்கள்.
Reviewed by Author
on
June 17, 2021
Rating:
Reviewed by Author
on
June 17, 2021
Rating:






No comments:
Post a Comment