அண்மைய செய்திகள்

recent
-

1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசி 1.5 மில்லியன் டோஸ்கள் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளன. கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இதேவேளை, நாட்டிற்கு இதுவரை 71 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

 அதேபோல், இந்நாட்டில் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 13.5 சதவீதமானவர்களுக்கு தற்போதைய நிலையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார். இலங்கையில் தற்போது 4 விதமான கொவிட் 19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன Reviewed by Author on July 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.