யாழில் பெண்களின் தாக்குதலுக்கு இலக்காகி தற்கொலை செய்த இளைஞனுக்கு கொரோனா
அதில் ஒருவரின் புறாவை இன்னுமோர் இளைஞன் தனது புறாக்களைக் கொண்டு இறக்கி உள்ளார்.
புறாவுக்குச் சொந்தக்காரனான இளைஞன் புறாவை திருப்பிக் கேட்டபோது, ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. அதில் புறாவுக்கு சொந்தக்காரனான இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, ஊர் மக்களின் கோரிக்கைக்கு இணங்க அந்த இளைஞர் குழு தாம் தாக்கிய இளைஞனிடம் மன்னிப்பு கோர அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த இளைஞனின் உறவினர்கள் உள்ளிட்ட பெண்கள் குழுவொன்று நான்கு இளைஞர்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தி, மிளகாய்த் தூளை முகத்துக்கு பூசி, சித்திரவதைகள் புரிந்து, அதனை காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.
அந்தக் காணொளியை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
இச் சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு வாரங்களின் பின்னர், பெண்கள் குழுவின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞன் ஒருவரின் பிறந்த நாளான கடந்த 26ஆம் திகதி தனது நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் சித்திரவதை புரிந்த பெண்கள் சிலர் ‘எங்களிடம் அடி வாங்கிட்டு, பிறந்தநாள் கொண்டாட வெட்கம் இல்லையா ?’ எனக் கேட்டுள்ளனர்.
பெண்களிடம் அடிவாங்கி சித்திரவதைக்கு உள்ளான காணொளி வைரல் ஆனதால், நண்பர்கள், உறவினர்களின் கிண்டல், கேலிகளுக்கு உள்ளாகி மனமுடைந்திருந்த இளைஞன், அந்தப் பெண்களும் தன்னை கேலி செய்தமையை தாங்காது அன்றைய தினம் இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப் பட்ட நிலையில், சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் கிடைத்தது.
அதில் இளைஞனுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டமையை அடுத்து, இளைஞனின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டு, கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது.
யாழில் பெண்களின் தாக்குதலுக்கு இலக்காகி தற்கொலை செய்த இளைஞனுக்கு கொரோனா
Reviewed by Author
on
July 30, 2021
Rating:

No comments:
Post a Comment