முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக 21இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் (2142500-00) பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் இன்று (15) வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கர் அவர்களிடம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ கையளித்தார்.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் ஜேசு ரெஜினோல்ட் , முல்லைத்தீவு மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.கேகிதா வைத்திய அதிகாரிகளான வைத்தியர் திரு.சோபன் வைத்தியர் திரு.விதுரன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.
Reviewed by Author
on
July 15, 2021
Rating:

No comments:
Post a Comment