அண்மைய செய்திகள்

recent
-

பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயண கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் முழுமையான பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை Reviewed by Author on August 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.