அண்மைய செய்திகள்

recent
-

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்- திலும் அமுனுகம

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை கள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சுமார் 75 வீதம் நாளை முதல் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம் தொழிலுக்காகச் செல்லும் பயணிகளுக்காக இன்று முதல் பஸ் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுவான போக்குவரத்து சேவை கள் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது பாரிய ஆபத்து இருப்பதால், கொரோனா தொற்றில் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குப் பயணிகள் சுகாதார பாதுகாப்பு விதி முறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் பயணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பய ணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்- திலும் அமுனுகம Reviewed by Author on August 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.