அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாக உள்ளவர்களுக்கான அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் பிசிஆர் (Rapid PCR) இன்று (14) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவி்கப்படுகின்றது. தமது நாட்டுக்கு தொழிலுக்காக பிறநாடுகளிலிருந்து வருகைத்தரும் பணியாளர்கள் ரெபிட் பிசிஆர் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 எனவே ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல ஆயத்தமாகும் பயணிகள், தமது விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருகைத்தருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாக உள்ளவர்களுக்கான அறிவிப்பு Reviewed by Author on August 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.