அண்மைய செய்திகள்

recent
-

44 சுகாதார தொழிற்சங்கங்களின் ஐந்து மணி நேர வேலைநிறுத்தம் ஆரம்பம்!

சுகாதார சேவையிலுள்ள 44 தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணி முதல் ஐந்து மணி நேர கூட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொவிட் -19 கொடுப்பனவை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். ஐந்து மணி நேர வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று மதியம் , நாடெங்கிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போராட்டப் பிரசாரங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இருப்பினும், கொவிட் சிகிச்சை மையங்கள், கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, மஹரகம அபேக்ஷா மருத்துவமனை மற்றும் இதர விசேட சிகிச்சை பிரிவுகளிலுள்ள ஊழியர்கள் சேவைகளில் இருந்து விலக மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கமும் சுகாதார அமைச்சு சுகாதாரத் துறையின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டது. தாதியர்கள், பிரதி மருத்துவ சேவையாளர்கள் , ஓட்டுநர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். செப்டெம்பர் 22 ஆம் திகதி மருத்துவமனைகளில் பாரிய எதிர்ப்புப் பிரசாரத்தைத் ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ரூ.7,500 கொவிட் கொடுப்பனவை அரசாங்கம் நிறுத்தியமையே போராட்டத்திற்கான கரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

44 சுகாதார தொழிற்சங்கங்களின் ஐந்து மணி நேர வேலைநிறுத்தம் ஆரம்பம்! Reviewed by Author on September 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.