அண்மைய செய்திகள்

recent
-

வடமராட்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

வடமராட்சியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். முள்ளிப் பாலத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விபத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை காண்டீபன் (வயது 40) என்பவரே உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது, புலோலி - கொடிகாமம் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் முள்ளிப் பாலத்துடன் மோதுண்ட நிலையில் ஒருவர் காயங்க ளுடன் கிடக்கிறார் என்று நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பொலிஸார் காயம டைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந் தார் என்று தெரிவிக்கப்பட்டது.

வடமராட்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி Reviewed by Author on October 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.