இலங்கை இன்னும் கொவிட் -19 தொற்று நோயிலிருந்து விடுபடவில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 200 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் மூலம் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு.
நிலைமையை எதிர்கொள்ள பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக இடைவெளி, முகக்கவசங்களை அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பொது மக்கள் குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது கடைப்பிடிக்க வேண்டும்.
கொவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களை தொடர்ந்து மூடுவது ஒரு தீர்வாகாது.
தடுப்பூசியைத் தொடர்ந்து சில நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம். இருப்பினும் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்தால் சிக்கல்கள் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
.
.
இலங்கை இன்னும் கொவிட் -19 தொற்று நோயிலிருந்து விடுபடவில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
Reviewed by Author
on
October 27, 2021
Rating:

No comments:
Post a Comment