தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் – அரசாங்கம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வணிகத் துறையைப் பாதிக்கும் கொள்கை அல்லது சட்ட விடயங்கள் குறித்த ஆய்வுக் குழுவில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் பங்கேற்புடனும் இந்த சட்டமூலம் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, முன்மொழியப்பட்ட சட்டத்தின் நடைமுறைத் திகதியில் 52 வயதை எட்டாத ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயதை 60 வயது வரை நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் – அரசாங்கம்
Reviewed by Author
on
October 12, 2021
Rating:

No comments:
Post a Comment