அண்மைய செய்திகள்

recent
-

வல்வெட்டித்துறையில் வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது!

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின்கள், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

 பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பலொன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோதே, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர். சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

.
வல்வெட்டித்துறையில் வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது! Reviewed by Author on October 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.