அண்மைய செய்திகள்

recent
-

நான்கு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்படத்தைத் தொடர்ந்து, இன்று புதிய விலைகள் அறிவிக்கப்படும்

பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்னவினால் இவ்வர்த்தமானியானது வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட பொருட்களின் இறக்குமதியாளர்கள், அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் சில்லறை விலையை தீர்மானிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய குறித்த பொருட்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. முன்னர் கோதுமை மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை ரூ.15 - 20 வரை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர். பால்மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 350 ரூபாவால் உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். இறக்குமதியாளர்கள் எரிவாயு சிலிண்டரின் விலையை 500 ரூபாவால் உயர்த்தவும், 50 கிலோ சீமெந்தின் விலையை 200 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நான்கு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்படத்தைத் தொடர்ந்து, இன்று புதிய விலைகள் அறிவிக்கப்படும் Reviewed by Author on October 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.