அண்மைய செய்திகள்

recent
-

இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரத் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில் நேற்று முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்துக்கு உரக் கையிருப்பு அனுப்பப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும் போகத்துக்குத் தேவையான 30,000 மெட்ரிக் தொன் சேதன உரம் நேற்று லிதுவேனியாவில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 

அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் விவசாய மேம்பாட்டு மையங்களுக்கு இந்த உரக் கையிருப்பானது அனுப்பப்பட்டுள்ளது. பொட்டாசியம் குளோரைட் கொண்ட 60 மெட்ரிக் தொன் இயற்கை உரம் மற்றும் 45 மெட்ரிக் தொன் சேதன உரம் என்பன அம்பாறையில் உள்ள லக் பொஹோரவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகம் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், அம்பாறை விவசாயிகளுக்கு 2500 மெட்ரிக் தொன் உரம் தேவைப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்! Reviewed by Author on October 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.