தடுப்பூசி செலுத்துவதில் அச்சம் வேண்டாம் தாமதமின்றி ஏற்றிக் கொள்ளவும்.
இந்த வகையில் கொவிட்19
தொடர்பான பல விழிப்புணர்வுகள் அரசினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மடு சுகாதார
வைத்திய அதிகாரியான வைத்தியர் எஸ்.பி.லெம்பேட் வழங்கிய செவ்வியின் முழு விபரம் பின்வருமாறு
கேள்வி: கொரோனாத் தடுப்பூசிகளை மக்கள் முன்வந்து ஏற்றிக் கொள்கின்றனரா?
பதில்: ஆம்ரூபவ் ஆரம்ப காலங்களில் மக்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான அச்சம் காணப்பட்ட போதிலும்
தற்போதைய காலப் பகுதியில் அச்சமானது தெளிவடைந்து தடுப்பூசியினை மனமுவந்து போட்டுக் கொள்கின்றனர்.
கேள்வி: சீனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சினோபார்ம் கொரோனாத் தடுப்பூசியினை பெரும்பாலான
மக்கள் பயமின்றி ஏற்றிக் கொள்கின்றனரா?
பதில்: ஆம்ரூபவ் கொரோனா உருவாகிய ஆரம்பத்தில் கொரோனா சீனாவிலிருந்து பரப்பப்பட்டது எனும்
கருத்து நிலவியதனாலும் கொரோனாவைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் பல வகை (6 வகை) உருவாகியமையாலும் மக்கள்
மத்தியில் பீதியேற்பட்டதால் சினோபார்ம் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ள ஆரம்பத்தில் பயந்தனர்.
ஆனால் தற்போது தாமாகவே முன்வந்து ஏற்றிக் கொள்கின்றனர்.
கேள்வி: எமது மடு பிரதேசத்தில் 20-30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி
வழங்கப்படுகின்றது. அதில் எத்தணை சதவீதமானோர் ஏற்றிக் கொண்டனர்?
பதில்: 60சதவீதத்திற்கு மேற்படோர்.
கேள்வி: சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் மக்கள் மனங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில்
உங்களது கருத்து என்ன?
பதில்: ஊடகங்கள் சிலவற்றின் போலியான தவறான கருத்துக்களால் மக்கள் பீதியடைந்தமை உண்மையாகும். ஆனால்
தற்போது அதன் உண்மைத்தன்மை நிலவரத்தினை ஓரளவிற்கு அறிந்து சினோபார்ம் தடுப்பூசியினை ஏற்றிக்
கொள்கின்றனர்.
கேள்வி: சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டால் குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்ல முடியாது
எனும் கருத்து சமூக மட்டத்தில் நிலவுகின்றது. அது தொடர்பிலான உண்மைத் தன்மை யாது?
பதில்: அவ்வாறான கருத்து நிலவியது உண்மையாகும். இதற்கு காரணம் ஊடகங்களில் வெளியான செய்தியாகும்.
ஆனால் உண்மை யாதெனில் உலக சுகாதார மையத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு வழங்கியதடுப்பூசியினைப் பெற்றுக் கொண்ட எவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும். இந்த வகையில் சினோபார்ம்
தடுப்பூசிக்கும் உலக சுகாதார மையத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: சினோபார்ம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதனால் யாதேனும் பக்க விளைவுகள் ஏற்பட
வாய்ப்புள்ளதா?
பதில்: இது வரையில் சினோபாம் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்ட எவரும் எங்களிடம் பக்க விளைவுகள்
தொடர்பில் முறையிடவில்லை.
கேள்வி: தடுப்பூசி ஏற்றிக் கொண்ட அன்று குளிக்கக் கூடாது எனக் கூறுவதற்கான காரணம் யாது?
பதில்: இதனை உளவியல் சார்ந்து தான் பார்க்க வேண்டும். தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டதன் பின்பு
குளிக்கும் போது இயல்பாகவே வேறொரு காரணத்தினால் அவருக்கு அசாதாரண சூழ்நிலையேற்படும் பொழுது
தடுப்பூசி பெற்றவர் எண்ணக்கூடும் தடுப்பூசி பெற்றதனால் தான் தனக்கு இந்நிலையேற்பட்டுள்ளது என்று.
எனவே தடுப்பூசி பெற்றதன் பின்பு குளிக்கக் கூடாது எனக் கூறுவதற்கு மருத்துவ ரீதியான எவ்வித காரணங்களும்
இல்லை.
கேள்வி: தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் அற்ககோல் எடுக்கக் கூடாது எனக் கூறுவதற்கான காரணம்
யாது?
பதில்: அற்ககோலுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்புத் தன்மையைக் குறைக்கும் தன்மையுள்ளது. எனவே
தடுப்பூசியினைப் பெற்றதன் பின்பு அற்ககோலை உடனே அருந்தும் போது தடுப்பூசியின்
தொழிற்பாட்டினை இது பாதிக்கக் கூடும். இதனால் தான் தடுப்பூசியினைப் போட்டவுடன் குறிப்பிட்ட சில
நாட்களுக்கு அற்ககோலை எடுக்க வேண்டாமெனக் குறிப்பிடப்படுகின்றது.
கேள்வி: 20-30 வயதிற்கிடைப்பட்ட இளைஞர்கள் பயமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக
யாதேனும் விழிப்புணர்வு விடயங்கள் பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
பதில்: குறிப்பிட்ட வயதுப் பிரிவினர்களுக்கு என்றில்லாமல் பொதுவாக தொலைக்காட்சி,வானொலி,
பத்திரிகை,துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும் பல அறிவிப்புக்கள் ஊடாகவும் விழிப்புணர்வுகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி: இன்னும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாது மறைந்து இருப்பவர்களால் சமூகத் தொற்று திரும்பவும்
ஏற்பட வாய்ப்புள்ளதா?
பதில்: இவ்வாறான நபர்களுக்குத் தொற்று இருந்தால் இவர்களால் கொரோனாவைப் பரப்ப முடியும். தடுப்பூசி
பெற்று ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு கொNhனா தொற்று நோய் ஏற்பட்டாலும் இந் நோய்
நிலமையின் வீரியம் குறைவாகவே காணப்படும். அதேவேளை தடுப்பூசியைப் பெற்று நீண்ட நாட்கள்
சென்றவர்களுக்கு கொரோனாத்தொற்று ஏற்பட நேரிடும் போது கொரோனா கிருமியானது அவர்களது
உடலில் இருந்து அழிந்து போகும். ஆனால் தடுப்பூசியினைப் பெறாமல் இருப்பவர்களுக்கு கொரோனாத்தொற்று வந்தால் அவர்களே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகுவர். சில நேரங்களில் அசாதாரண சூழ்நிலை
ஏற்படும் போது இறக்கவும் கூடும்.
கேள்வி: கொரோனாத் தடுப்பூசி தொடர்பான போலித் தகவல்கள் பல பரப்பப்பட்டு வருகின்றன. அதனைத் தடுக்க
அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எவை?
பதில்: போலித் தகவல்கள் பற்றி அரசாங்கத்திற்குத் தெரிய வரும் போது அதனைத் தீவிரமான விசாரணைக்கு
உட்படுத்தி சரியான தகவலை ஊடகங்கள் வாயிலாக அரசாங்கம் அறியத்தருகின்றது. இதில் சுகாதார அரச பணியகம்
முக்கிய பங்காற்றி வருகின்றது.
கேள்வி: சினோபார்ம் தடுப்பூசியும் ஏனைய தடுப்;பூசிகளைப் போன்று தானா தொழிற்படுகின்றது?
பதில்: ஆம், ஒவ்வொரு தடுப்பூசியும் உருவாக்கப்பட்ட விதங்கள் வேறுபடும்.
கேள்வி: பல மக்களின் கருத்து பைசர் தடுப்பூசி தான் சிறந்தது என்றும் சினோபார்ம் சிறந்ததில்லை
என்றும்,இது தொடர்பிலான தங்களது கருத்து என்ன?
பதில்: ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்து நிலவி வந்தாலும் அது தற்போது படிப்படியாக மாறி
வருகின்றது.
கேள்வி: இறுதியாக கொரோனாத் தடுப்பூசி தொடர்பில் குழப்பமடைந்துள்ள மக்களுக்குத் தாங்கள் கூற
விரும்பும் செய்தி யாது?
பதில்: ஊரோடினால் ஒத்தோடு.
-வீ.அனித்தா
நான்காம் வருடம்
ஊடகக் கற்கைகள் துறை
தடுப்பூசி செலுத்துவதில் அச்சம் வேண்டாம் தாமதமின்றி ஏற்றிக் கொள்ளவும்.
Reviewed by Author
on
October 17, 2021
Rating:

No comments:
Post a Comment