அண்மைய செய்திகள்

recent
-

அதிபர் - ஆசியர்களின் போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஆசிரியை உயிரிழப்பு!

அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினர் இணைந்து நேற்றைய தினம் தேசிய தின போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

 இலங்கையில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் தெனியாய, கொட்டப்பொல பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த போதே குறித்த இளம் ஆசிரியை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வருணி அசங்க (வயது-27) என்ற இளம் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த ஆசிரியைக்கு 13 வயதில் அறுவைச் சிகிச்சை நடாத்தப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் - ஆசியர்களின் போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஆசிரியை உயிரிழப்பு! Reviewed by Author on November 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.