அண்மைய செய்திகள்

recent
-

கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை!

மறு அறிவித்தல் வரும் வரை தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டை சூழவுள்ள ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழகத்தின் வடக்கு கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளது. அப்பகுதி மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை! Reviewed by Author on November 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.