அண்மைய செய்திகள்

recent
-

நாவலர் மண்டபத்தில் மீண்டும் குடிகொண்ட ஆறுமுக நாவலர்

நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 கார்த்திகை தீபத் திருநாளில் இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.





நாவலர் மண்டபத்தில் மீண்டும் குடிகொண்ட ஆறுமுக நாவலர் Reviewed by Author on November 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.