அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்ததைப் போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையை மீண்டும் நிறுவ உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

 இதற்கமைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்! Reviewed by Author on November 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.