அண்மைய செய்திகள்

recent
-

பருத்தித்துறையில் தோட்டக்கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் பலி

தோட்டக் கிணற்றில் மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந் துள்ளார். நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நியந்தன் ரித்திக்குமார் (வயது- 08) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் சிறுவன் தோட்டக்காணியில் பட்டம் ஏற்றி விளையாடிவிட்டு சகோதரி யுடன் இணைந்து தோட்டக்காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி வீழந் துள்ளான். 

 சம்பவத்தை ஓடிச் சென்று உறவினர் களிடம் சகோதரி தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் சென்று கிணற்றில் தேடிய போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக இறப்பு விசாரணையில் தெரி விக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ச. சிவராசா, சடலத்தை உடற் கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

பருத்தித்துறையில் தோட்டக்கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் பலி Reviewed by Author on December 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.