அண்மைய செய்திகள்

recent
-

பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவும் - சுகாதார அமைச்சர்

நாட்டின் தடுப்பூசி விகிதங்கள் திருப்திகரமான மட்டத்தில் இருப்பதால், நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றும், பண்டிகைக் காலங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறினால் இந்தாண்டு உருவான புத்தாண்டுக் கொத்தணி போல புதிய கொத்தணி உருவாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நத்தார் மற்றும் புத்தாண்டுக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்தார். 

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இலகுவான வழி ஊரடங்கு என பலர் கூறினாலும், அத்தகைய நேரத்தில் உள்ளூர் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அனைவரையும் விரைவில் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவும் - சுகாதார அமைச்சர் Reviewed by Author on December 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.