அண்மைய செய்திகள்

recent
-

'சமுர்த்தி சௌபாக்கியா' வாரத்தை முன்னிட்டு மன்னாரில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.

'சமுர்த்தி சௌபாக்கியா' வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி வதிவிட பொருளாதார நுண் நிதி சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் நடைமுறைப்படுத்தப்பட்ட 'சமுர்த்தி சௌபாக்கியா' வார நிகழ்வு மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் துரித நடவடிக்கைக்கு அமைய பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதார அபிவிருத்தியை மேலோங்கச் செய்யும் நோக்கில் வாழ்வாதார உதவித் தொகையும், மாணவ மாணவிகளுக்கு சிப்தொர புலமைபரிசிலும் மன்னார் பிரதேசச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 

 குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், சமுர்த்தி பணிப்பாளர் ஐ . அலியார், பிரதேச செயலக கணக்காளர், தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், பயனாளிகள், மாணவர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வானது மடு,மாந்தை மேற்கு மற்றும் முசலி பிரதேசச் செயகங்களிலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                 












'சமுர்த்தி சௌபாக்கியா' வாரத்தை முன்னிட்டு மன்னாரில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு. Reviewed by Author on December 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.