அண்மைய செய்திகள்

recent
-

24 மணி நேரத்தில் வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே நேற்று (திங்கட்கிழமை) மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களிடம் இருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுதோடு மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்தில் வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது! Reviewed by Author on December 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.