அண்மைய செய்திகள்

recent
-

மட்டு வாழைச்சேனையில் காணி தகராற்றில் மருமகன் மாமானாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை மருமகன் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் காணி தகராறு ஒன்றில் மருமகன் மாமானாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்த நிலையில் அவரை கைது செய்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். ஓட்டுமாவடி மஜ்மா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய அலியார் அப்துல் ஹமீத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பகுதியில் காணி ஒன்றின் மருமகன் மற்றம் தாயின் சகோதரரான மானாருக்கு இடையே சம்பவதினமான இன்று காலை 9 மணிக்கு தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் மாமனாரை கூரிய ஆயதத்தால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்துக்கு சென்றதையடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதில் கொலை செய்யப்பட்டவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

மட்டு வாழைச்சேனையில் காணி தகராற்றில் மருமகன் மாமானாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை மருமகன் கைது Reviewed by Author on December 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.