அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டது!

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கோமாரி பகுதியில் கடந்த சனிக்கிழமை பிக்குகளால் பொலிஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அப்பகுதி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து நேற்று அகற்றப்பட்டது. இரகசியமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருக்கோ வில் காவல்துறையினர் கலவரங்கள் எற்படாதவாறு நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். திருக்கோவில், பொத்துவில், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவி தவிசாளர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை ஆராய்ந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்குள் புத்தர் சிலையை அகற்றுவதாக திருக்கோவில் காவல்துறையினர் உறுதியளித்த நிலையில் மக்கள் அங்கிருந்து சென்றனர். 

இந்நிலையில் மக்களின் பலத்த எதிா்ப்புப் போராட் டத்தினால் குறித்த புத்தர் சிலை அகற்றப்பட்டது. இதேவேளை, புத்தர் சிலை அமைக்கப்பட்டது தொடர்பாக நேற்று அவ்விடத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கோரளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சேகர் மற்றும் அம்பாறை இணைப்பாளர் துசாந்தன் ஆகியோர் நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டது! Reviewed by Author on December 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.