அண்மைய செய்திகள்

recent
-

கேட்டில் சிக்குண்டு 3 வயது சிறுமி பலி!

வீட்டின் கேட் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளார். தொடம்கஸ்லந்த, தெலம்புகல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொஹமட் இர்ஷாத் மரியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியும் அவரது உறவினரான நான்கு வயது பிள்ளையும் நேற்று மதியம் கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 அவர்கள் கேட்டில் தொங்கியுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். இதன்போது, கேட் அவர்கள் மீது விழுந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பிள்ளை பலத்த காயங்களுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கேட்டில் சிக்குண்டு 3 வயது சிறுமி பலி! Reviewed by Author on December 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.