அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரக்கறி வியாபாரிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மரக்கறி வகைகளுக்கான தட்டுப்பாடு நீடிக்குமானால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 தற்போது மரக்கறிகளின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக தமக்கு வியாபாரத்தை எடுத்துச் செல்ல முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை! Reviewed by Author on December 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.