அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 875 கிலோ மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு இரவில் கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை பொலிஸார் இன்று (2) பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 இதன்படி, வேதாளை தென் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார் துரித சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 35 கிலோ வீதம் 25 மூடைகளில் 875 கிலோ மஞ்சள் இருந்தது தெரிந்தது. மஞ்சள் மூடைகளை பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலைத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக முகமது அலி ஜின்னா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.



இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 875 கிலோ மஞ்சள் பறிமுதல் Reviewed by Author on January 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.