இலங்கையின் ஊட்டச்சத்து நிலை தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஆய்வு -சுகாதார அமைச்சு
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, இது தொடர்பான தரவு சேகரிப்பு செயல்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 2000 குடும்ப அலகுகள் கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இலங்கையில் இவ்வாறான போஷாக்கு நிலை ஆய்வானது கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மக்களின் போஷாக்கு நிலையானது, கொவிட்-19 தொற்று நோயின் தொடக்கத்தில், நாடு பலமுறை முடக்கப்பட்டதால் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
நகர்ப்புற மற்றும் தோட்டப் பகுதிகளிலுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஊட்டச்சத்து நிலை விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சினால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையின் ஊட்டச்சத்து நிலை தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஆய்வு -சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
January 22, 2022
Rating:
No comments:
Post a Comment