அண்மைய செய்திகள்

recent
-

யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா; இதுவரை மூவருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு மலேரியா நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதான ஒருவருக்கே மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஜமுனாநந்தன் குறிப்பிட்டார்.

 தென்னாபிரிக்காவிலிருந்து கடந்த வாரம் குறித்த நபர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (03) அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மூன்று பேருக்கு இதுவரை மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா; இதுவரை மூவருக்கு தொற்று Reviewed by Author on January 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.