மட்டு . ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
இதன்போது கொக்கட்டிச்சோலை கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய முத்துபண்டா யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்து வண்டியும், ஆரையம்பதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி மக்கள் வங்கிக்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பேருந்து வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்ததுடன் , உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு . ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
February 24, 2022
Rating:
No comments:
Post a Comment