அண்மைய செய்திகள்

recent
-

ஹொரண நீலக பொலிஸாரால் சுட்டுக்கொலை

தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவன் ஒருனை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் தந்தையான ஹொரண நீலகவினால் சிறுவன் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது. 

 ஹொரண நீலக என்ற சந்தேகநபர், குறித்த வீட்டிற்கு வந்து T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது சிறுவனை கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத் துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார். இச்சம்பவத்தின் பின்னர் அவரது குழந்தை மாமியாரின் பாதுகாப்பில் இருந்துள்ளது.

ஹொரண நீலக பொலிஸாரால் சுட்டுக்கொலை Reviewed by Author on February 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.