அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மெசிடோ நிறுவனத்தால் ஒரு தொகுதி முகக் கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி என்பன அரச அதிபரிடம் கையளிப்பு.

மன்னாரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது ஓமிக்ரோன் திரிபினால் மூன்று பேர் மன்னார் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். -இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரச உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்காக ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி என்பன இன்றைய தினம் வியாழக்கிழமை (24) மாலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால்(மெசிடோ) மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலனிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் மெசிடோ நிறுவனத்தால் ஒரு தொகுதி முகக் கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி என்பன அரச அதிபரிடம் கையளிப்பு. Reviewed by Author on February 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.