அண்மைய செய்திகள்

recent
-

சுகந்திர கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றியை பியூஸுக்கு அர்ப்பணித்த வடமாகாண கால்பந்தாட்ட வீரர்கள்

இலங்கையின் மாகாணங்களை உள்ளடக்கி இடம் பெற்ற 2022 ஆண்டுக்கான சுகந்திர கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இறுதி போட்டி நேற்றைய தினம் யாழ்பாணத்தில் இடம் பெற்ற நிலையில் வடமாகாண அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுகந்திர கிண்ணத்தை கைப்பற்றினர்

 குறித்த வெற்றியை மரணமடைந்த தேசிய உதைபந்தாட்ட அணி வீரரும் மன்னார் மாவட்ட வீரருமான ஆன பியூஸ்லஸ்க்கு அர்பணிக்கும் முகமாக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களும் இன்றைய தினம் வருகை தந்து பியூஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வெற்றியையும் பியூஸுக்கு அர்பணித்தனர் சுகந்திர கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்ள முதலே குறித்த போட்டியின் வெற்றி பியூஸிற்காக அர்பணிக்கப்படும் என வீரர்கள் தெரிவித்திருந்த நிலையில் வெற்றியின் பின்னர் இன்றைய தினம் பயிற்றுவிப்பாளர்கள்,அணித்தலைவர் உட்பட வடமாகாண கால்பந்தாட்ட அணியினர் தமது வெற்றியை மனப்பூர்வமாக அர்பணித்துள்ளனர்
             







சுகந்திர கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றியை பியூஸுக்கு அர்ப்பணித்த வடமாகாண கால்பந்தாட்ட வீரர்கள் Reviewed by Author on March 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.