அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் சீனாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும். 

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இலங்கையின் உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமாக கடன் உதவியை சீனாவிடமிருந்து இலங்கை கோரியுள்ளது. இலங்கை மேலதிக நிதிஉதவியை கோரியுள்ளது இரு தரப்பும் இது குறித்து ஆராய்கின்றன என்பதை உறுதி செய்ய முடியும் என சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் சீனாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை Reviewed by Author on March 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.