அண்மைய செய்திகள்

recent
-

பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழை; கிளிநொச்சியில் 14 குடும்பங்கள் பாதிப்பு - 12 வீடுகள் சேதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடும் காற்றுடன் பலத்த மழை சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது. 

குறித்த காலநிலை காரணமாக செல்வாநகர் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 25 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது. இதேவேளை கிருஷ்ணபுரம் பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 17 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான இடர் கால உதவிகளை வழங்க மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவும், கரைச்சி பிரதேச செயலகமும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழை; கிளிநொச்சியில் 14 குடும்பங்கள் பாதிப்பு - 12 வீடுகள் சேதம்! Reviewed by Author on March 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.