நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு – நெருக்கடி என எதுவுமில்லை - பிரதமர்
எரிபொருள் கையிருப்பு நான்கு நாட்களிற்கு மாத்திரம் நீடிக்கும் என்ற தவறாக வழிநடத்தும் அறிக்கையால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது நிர்வாகத்தின் போது எரிபொருள் கையிருப்பு சிலவேளைகளில் ஒரு நாளைக்கு போதுமானதாக மாத்திரம் காணப்பட்டது என தெரிவித்துள்ள பிரதமர் எனினும் எரிபொருட்களை வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் என தெரிவித்துள்ளார்.
அரசியலில் குறைந்த அனுபவம் உள்ளவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தின என குறிப்பிட்டுள்ள பிரதமர் இதன் காரணமாக மக்கள் நீண்டவரிசையில் எரிபொருளிற்காக காத்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு – நெருக்கடி என எதுவுமில்லை - பிரதமர்
Reviewed by Author
on
March 06, 2022
Rating:
No comments:
Post a Comment