முல்லைத்தீவு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்!
இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்கள் பிரதேச செயலாளர் ரீதியாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலர் பிரிவின் காணிக் கோரிக்கைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் இதன்போது புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள காணி உரித்து நிர்ணயித்தல்(Land Ownership) செயற்றிட்டம் தொடர்பாக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கு.முரளீதரனால் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைவிட இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் நேர்முகத் தேர்வின் முன்னேற்றம், Zoning plan தயாரித்தல், National Land Use Survey தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கு.முரளீதரன், குறித்த பிரதேச செயலாளர்கள், மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், கம நல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்!
Reviewed by Author
on
March 25, 2022
Rating:
Reviewed by Author
on
March 25, 2022
Rating:

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment